Sunday, September 03, 2006

வேதாள ப்ரொக்ராம்

நீண்ட நாட்களாக முடிக்காமல் வைத்திருந்த ஒரு ப்ரொக்ராமை எழுதிக் கொண்டிருந்தேன். விக்ரமாதித்தன் முதுகில் ஏறிய வேதாளம் போல அது என்னைப் படுத்திக் கொண்டிருந்தது. ஒரு வழியாக அதைக் கொஞ்சமாக வொர்க் செய்ய வைத்துவிட்டு வலையை மேய ஆரம்பித்தேன். திருவாளர் "டுபுக்கு"-வின் ப்ளாக்கின் மேல் எனக்கு அலாதிப் ப்ரியம். சிறிது நேரம் அவர் ப்ளாக்கை மேய்ந்தேன். தூங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது, திடீரென என் ப்ரொக்ராம் ஞாபகம் வந்தது. இன்னும் ஒரு தடவை அதை டெஸ்ட் செய்து விடலாமே என்று தோன்றியது. ஆரம்பித்தேன். நிஜமாகவே வேதாளம் போல ப்ரொக்ராம் வேறு சில இடங்களில் பிய்த்துக் கொள்ள ஆரம்பித்தது.

உடனே எனக்கு சிங்கப்பூரில் இருந்த போது நண்பர் சிவா அவர் ப்ரொக்ராம் பற்றி அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது -

"மாப்ளே! என் க்ளையன்ட் ரொம்ப ப்ரச்னை பண்ணிணா அவனை ஒரே வரியில ஸைலென்ட் ஆக்கிடுவேன்."

"என்ன அது?"

"ப்ரச்னை பண்ணிணா என் ப்ரொக்ராமை அவன் சிஸ்டம்ல ரன் பண்ணிடுவேன்னு சொல்லிடுவேன். பேசாம போயிடுவான்."

ம்... நாளைக்கு நானும் இதைத்தான் செய்ய வேண்டுமென்ற முடிவோடு படுக்கச் சென்றேன்.

0 Comments:

Post a Comment

<< Home