Friday, February 02, 2007

எளங்காத்து வீசுதே

பிதாமகன் படத்திலிருந்து 'எளங்காத்து வீசுதே' கேட்டுக் கொண்டிருந்தேன். என்னை எங்கோ கொண்டு சென்றது அந்தப் பாடல்! அதன் லிரிக்ஸ் இதோ:

எளங்காத்து வீசுதே எச போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே
கரும் பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

பின்னி பின்னி சின்ன எழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ண துணி போல
ஒண்ணுக்கொண்ணு தான் இணஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமஞ்சு இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்கு தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு, யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல (எளங்காத்து வீசுதே...)

மனசுல என்ன ஆகாயம்
தினம் தினம் அது புதிர் போடும்
ரகஸியத்தை யாரு அறிஞ்சா?
அதிசயத்தை யாரு புரிஞ்சா?
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம் தோறும்
மலர் தொடுக்க நாறை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு?
ஆலம் விழுதிலே ஊஞ்ஜல் ஆடும் கிளியெல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே,
தாயின் மடிய தேடி ஓடும் மலை நதி போலே....... (கரும் பாறை மனசுல...)

0 Comments:

Post a Comment

<< Home